Tuesday, July 29, 2008

என்னம்மா கண்ணு சௌக்கியமா ?

பெனாங் நகரில் பெரியார் படப்பிடிப்பு - அம்பேத்கராக நான் .
இயக்குனர் வசனம் படிக்க நாங்கள் கேட்க .....


எனது நண்பர் நடிகர் சத்யராஜ் அவர்களை நான் சுழர்ட்சங்கம் சார்பில் வானவில் என்ற எங்களது மாநில மாநாடுக்கு பேட்டி கண்டேன் . இது ஒரு அற்புதமான கேள்வி பதில் நிகழ்ச்சியாக அமைந்தது . அவருக்கும் எனக்கும் ஒரு வேற்றுமை இருந்தாலும் எங்கள்ளுக்குள் ஒரு நல்ல நட்பும் உண்டு. அதுதான் ஆன்மிகம் . தலைவா நம்ம அதை பற்றி மட்டும் பேச வேண்டாம் , நானும் மாற மாட்டேன் நீங்களும் மாற மாடீங்க என்று சொல்லுவார். அவரிடம் எனக்கு பிடித்த ஒன்று .....ஓபன் ஆக பேசுவார் . சற்று உணர்ச்சிவசப்படுவார் என்றாலும் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார் . ஒரு சில நேரங்களில் அவரது கொள்கை அவரை சில கருத்துக்களை சொல்ல வைத்து விடுகிறது .....அதுவே அவருக்கு பலவீனம் என்று சிலர் சொல்லல்லாம் ....அதை ஒரு பலமாகவும் எடுத்துகொள்ளலாம் . அவரோடு பல படங்களில் நடித்து இருக்கிறேன். ஒரு அற்புதமான யதார்த்தத்தை அவர் நடிப்பில் நாம் பார்க்கலாம். என்றுமே அவர் பந்தா பண்ணதில்லை . எல்லோருடனும் சகஜமாக பழகுவார் . ஒரு முறை காஞ்சீவரம் கோவில் அருகே ஷூட்டிங் நடந்தது . எங்களுடன் ஸ்ரீவித்யா வும் இருந்தார் . அப்பொழுது ஒரு பஸ் நிறைய ஆந்திர மாநிலத்தில் இருந்து பயணிகள் வந்தார்கள் . நாங்கள் இருந்த இடத்தை நோக்கி வந்தார்கள் . அவர்கள் இருவரும் ஹீரோ ஹெரோஇன் ஆக நடித்தவர்கள் , அவர்களின் கைஎழுத்தை வாங்க வருகிறார்கள் என்று நான் சும்மா இருந்தேன் . பார்த்தால் என்னிடம் வந்து படம் எடுத்துக்க வேண்டும் என்று சொல்லி எடுத்துக்கொண்டார்கள்,அவர்கள் இருவரையும் கண்டுக்கொள்ளவே இல்லை .


எனக்கு ஒரு விதமான சங்கோஜம் . சத்யராஜ் சிறுத்து கொண்டே தலைவா டிவி பவர் அது என்றார். அப்பொழுது மர்மதேசம் விடாது கருப்பு என்ற தொடர் தெலுங்கு மற்றும் தமிழில் ஓஹோ என்று ஓடிக்கொண்டு இருந்தது அவருக்கும் தெரியும் . பார்த்துவிட்டு என்னையும் பல முறை பாராட்டி இருக்கிறார் . இவ்வளவு சிம்பிளான ஒரு மனிதரை சந்திப்பது அரிது . ஆண்டவன் அவருக்கு அனைத்து சுகம்களையும் நிரந்தரமாக தர நான் வேண்டிக்கொள்கிறேன் .


அந்த ரோட்டரி நிகழ்ச்சியை யூடுபில் போட்டுஇருக்கிரேன் ......அதில் அவர் மக்கள் திலகம், நடிகர் திலகம் , பாலச்சந்தர் , பாரதிராஜா என்று எல்லோரை பற்றி பேசினார் .
அது மட்டும் இல்லை ......மிமிக்ரி யும் செய்து அசத்தி இருக்கிறார் ..........

http://www.youtube.com/watch?v=--DfNYxClOs

http://www.youtube.com/watch?v=66J6yCRDFLY

Thursday, July 24, 2008

சிவாஜி கணேசன் - AVM

ஹாளிவூடில் ஹிட்ச்காக் அலுவலகம் ......



எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத பெருமை நமது அய்யாவிற்கு உண்டு . பராசக்தி என்ற அந்த காவியத்தில் முதல் முதலில் திரையில் தோன்றி சரித்திரம் படைத்தார் . முதல் படமே சூப்பர் ஹிட் . முதல் படத்திலேயே கதாநாயகன் . 1950 ல் சுமார் ஜூலை ஆகஸ்டில் ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து படப்பிடிப்பு தொடங்கி 1952 தீபாவளிக்கு தான் படம் வெளி வந்தது . இரண்டு ஆண்டு போராட்டம் , பல இன்னல்கள், பூசல்களை தாண்டி வந்து தமிழ் திரையின் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது அந்த படம் . ஏன் ....அரசியல் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது என்றால் மிகை ஆகாது . அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் பட்ட சோதனைகளை பற்றி அவரே அவரது சுய சரிதத்தில் எழுதி இருக்கிறார் .
பராசக்தி வெளி வந்த 50 வது ஆண்டு அந்த படத்தின் இணை தயாரிப்பாளர்களான AVM நிறுவனம் ஒரு அற்புதமான சாதனையய் செய்தது.
இந்த நேரத்தில் நாம் தயாரிப்பாளர் பீ .எ.பெருமாளை பற்றியும் நினைவு கூற வேண்டும் . அந்த இளம் நடிகரை கண்டு பிடித்து அவரை கொண்டுதான் படம் எடுப்பேன் என்று விடாபிடியாய் நின்றவர் அவர் . சிவாஜியும் அவரின் குடும்பமும் என்றுமே தெய்வமாய் நினைப்பதும் அவரைதான் .
இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு ....எவ்வளவு செண்டிமெண்ட் பார்பவர்களாக இருந்தால் முதல் வசனம் பேசும் அந்த நடிகரை சக்செஸ் என்று சொல்ல வெய்த்து இருப்பார்கள் .
அவர் அந்த வசனத்தை பேசிய அதே இடத்தில் அந்த மாபெரும் நடிக மேதைக்கு ஒரு நினைவுச்சின்னம் எழுப்பினார்கள் .
இல்லை , இல்லை அது நடிப்பு பிறந்த இடத்தை குறிக்கும் ஒரு சின்னம் .

உலகத்தில் எந்த ஒரு நடிகனுக்கும் அவரை அறிமுகம் செய்த எந்த ஒரு ஸ்டூடியோவும் செய்யாத ஒரு மரியாதையே செய்தார்கள் . நான் யூடுபில் போட்ட சிவாஜி அவர்களின் உரையை கேட்டுப்பார்த்தால் அந்த நிறுவனத்தின் மீது அவர் வெய்த்து இருந்த மரியாதையை பார்த்து இருப்பீர் .


இப்படி உலகத்தின் முதல் முறை சாதனை ஒன்று நடந்த அன்று திரு கமல்ஹாசன் மற்றும் ஆ வீ எம் மற்றும் சிவாஜி குடும்பத்தை தவிர நானும் இருந்தேன் என்பதை ஒரு மிகப்பெரிய கௌரவமாய் கருதிகிறேன். ஏன் என்று கேட்டிர்களானால் திரு சரவணன் அவர்கள் இப்படி ஒரு நினைவு சின்னம் செய்யவேண்டும் என்ற பொது அவருடன் அந்த சின்னம் அமைப்பு மற்றும் அதில் வரும் எழுத்துக்கள் போன்ற விவரங்களில் சற்று உதவியாய் இருந்த காரணம் தான் .


நான் ஹாலிவூட் சென்ற போது யூனிவேர்சல் ஸ்டூடியோ பொய் பார்த்தேன். அங்கு கூட ஹிட்ச்காக் பயன் படுத்திய ரூமின் வெளியே அவரது கார்ட்டூன் ஒன்றை போட்டு இருக்கிறார்கள் . அந்த அறையை யாரோ ஒருவர் இன்று பயன் படுத்திகொண்டு இருக்கிறார்கள் .


நமது தமிழகத்தில் , நமது சென்னையில் இப்படி சரித்திரம் படைக்கும் ஒரு இடம் இருப்பது உங்களுக்கு தெறியுமா ?
இடத்தை ஒதிக்கி இதனை செய்த ஏ வீ எம் நிறுவனத்துக்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பில் ஒரு பெரிய நன்றி ........





Sunday, July 20, 2008

நடிகர் திலகம் .....ஒரு அஞ்சலி ...


இன்று தான் அவர் நம்மை விட்டு பிரிந்த நாள் . 21st ஜூலை 2001.


ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது . ஒரு முறை அவரோடு பேசிக்கொண்டு இருந்தேன் ..பல விசயங்களை அலசிவிட்டு நடிப்புக்கு வந்தோம் .அவருக்கு அப்பொழுது உடல் நலம் சற்று குறைவு . இருந்தாலும் நடித்துக்கொண்டு இருந்தார் . நான் அவரிடம் ' எப்பொழுது ரிடயர் ஆவிர்கள் என்று கேட்டேன் ....ஏன் ? நான் நடிக்கறது உனக்கு புடிக்கலையா இல்ல உன் TV நடிப்பு க்கு நான் போட்டியா ? என்றார் ....சிருத்துக்கொண்டே ..


இல்ல அப்பா உங்க உடம்புக்கு ஏன் ஸ்ட்ரைன் தரீங்க என்டறேன் ....பதில் வரவில்லை ..மீண்டும் கேட்டேன் ...சற்று யோசித்து சொன்னார் ...என்னக்கி கணேசன் செட்டுக்கு லேட்ஆ வரானோ அன்னக்கி ரிடயர் ஆகிவிடுவாண்டா என்றார் ...அந்த அபார மனிதனின் தொழில் பக்தியை பற்றி யோசித்தேன் . காலத்தை மற்றவர் நேரத்தை அவர் மதித்ததை பற்றி யோசித்தேன் ...எனக்கு பேச்சு வரவில்லை ....சற்று நேரம் அவர் என்னை பார்த்தார் , யோசித்து விட்டு திரும்பினார் ..இரண்டு அடி எடுத்து ,திரும்பி என்னை பார்த்து சொன்னார் ....இல்லடா மோகன் அன்னக்கி கணேசன் செத்துடுவாண்டா .... செத்துடுவான் .....


ஒரு வேலை இன்று ஏழு ஆண்டுகளுக்கு முன் அவர் செட்டுக்கு லேட்ஆ போனாரோ ....... இல்லை, இல்லை ரொம்ப சீக்ரமாகவே போய்விட்டார் .....


நடிப்புக்கு மற்றும் அல்ல ..தொழில் பக்திக்கும் இலக்கணம் வகுத்தவரை இன்றும் என்றும் மறவாதிருக்க எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.






S.P.B another simple soul


Having said a bit about the Superstar, let me talk of another really great person, a man who does not know the meaning of the words "pride" and "selfishness".The Great singer SPB. Balu Anna and I have had several interactions , thanks to a few films we shot and thanks to , you will be surprised Indian Cricketeers Anil Kumble, Venkatesh Prasad, Rahul Dravid, VVS Lakshman and so on.It was because of these people that I had a chance to re establish and re affirm my friendship with my colleague and fantastic actor Subalekha Sudhakar and his lovely "dharmapatni" S.P.Shailaja - an equally talented person.
The first time I had a really long chat with SPB was in the film city.I was shooting for a TV serial that he was making on various music directors etc and we were the only two actors on the set. During the break I asked him to hum a few songs which he so readily obliged.In fact it turned out to be a half hour of "neyar viruppam" - I being the only neyar - His friend Mr.Vittal was concerned that he was straining his voice but SPB would not listen and continued to sing....such is his greatness and simplicity.
Recently we all met at Sudhakars house ,of course , the cricketeers had to leave by 9 PM as they had a match but the rest of us stayed on to listen to the Paadum Nila...
I am posting a few videos taken that day - it was taken on one of these mini cameras - without proper lighting and sound but will still bring out the greatness of the voice and the Man....Incidentally this is NOT one of those "secretly" shot videos but Balu Anna knew that my friend kavithalaya krishnan was shooting it.Please check out You Tube....I promise you a great wealth of Information...here he sings an old TMS song, a mohammed rafi song and one of his own 'Ilamayenum Poongaatru"..
Hope he gives you as much pleasure as all of us derived that day....May the almighty grant him Peace, Prosperity and a long and happy life.
Such simplicity is rare to come by that too in the film industry...If the Superstar is one SPB is another.

SPB sings a rafi number
http://www.youtube.com/watch?v=yYiJg_ugGv0

SPB on MSV and kannadasan/TMS
http://www.youtube.com/watch?v=DiT-X33VZ0k

SPB - Ilamaienum poongaatru
http://www.youtube.com/watch?v=fW0SHBHWJEc

Thursday, July 17, 2008

Kuchelan The Film



I find that there have been several discussions and views and points and counterpoints being made about the film....Good, if not great...but , let us be clear on what this film is.....a film on Friendship , a film on how a person can stay simple even when he has reached giddy heights , a film of a person who does not forget his past and a film of a simple village barber who does not feel like using old friends to relieve his difficulties, especially economic ones.
Many ask this question , will it be like the malayalam Original.??? WHY , why this comparison....was Ghajini like Memento , was Avvai Shanmukhi like Mrs.Doubtfire....these are irrelevant questions and comparisons....both these Tamil Films were by themselves terrific entertainers and that is what counts...P.Vasu is a great one for adapting stuff to suit the STAR.....in this case a REAL SUPERSTAR....We should never compare and ask , if the Tamil film is "as good" as the original etc..is this film entertaining ? that is the question one should ask.Many said that Chandramukhi was not as "good" as the Malayalam original Manichiththirathaazh...I am not going to get into that arguement , if you want to see Fazil's version, please see the Original.....It is like saying that we have had Valmiki,Kambar.Thulasidas,and many others including Rajaji and now Ashok Banker writing the story of Lord Rama....so now which is better??
I believe that P.Vasu is a Director who is Producer Friendly, Artiste friendly and Audience friendly...he will not strain any of them beyond a point.He will ensure that justice is done to all. I want all those who talk of "will it be like the malayalam film?' to Please refrain from comparisons....THIS FILM WILL BE A GREAT ENTERTAINER, focus on fine values and do much for the Tamil Film Industry. P.Vasu knows how to handle the Superstar...he will not ask a Lion to pull a bullock Cart....Will it be like Basha or Annamalai or Mannan....well, each of these films were so totally different from one another...Annamalai the Milkman was totally different from Manickam the Auto driver while Mannan was "Taming of the Shrew"....I know what has been done and I can boldly say that there is good fun, frolic,sentiment and a super message in the film...This will be a movie enjoyed by not just the fans of Superstar but any one who has ever had a dear friend in life. Believe me that the Superstar has done a splendid job in the last reel, what an actor....Kudos...for I am seeing the actor in him emerge after a long time of being overshadowed by the Star.Indeed he has not acted but lived the role.....

சூப்பர் ஸ்டார் - இரண்டாம் சம்பவம்




இந்த முறை நான் கூறும் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகிறது. இன்னும் சொல்லப்போனால் பத்து, பனிரெண்டு ஆண்டுகள் என்றே சொல்லலாம். நான் ஒரு சிவாஜி ரசிகன் என்றும், எம்.ஜி.ஆர் அவர்களின் குடும்ப வக்கீலும், நண்பரின் மகன் என்பதும் தெரியும் என்று நினைக்கிறேன். 1975க்கு பிறகு நான் தமிழ்ப்படங்கள் பார்ப்பதைக் குறைத்து ஆங்கிலப்படங்களையே விரும்பி பார்த்துக்கொண்டிருந்தேன். அதனால் பல நல்ல படங்களை, ரிலீஸ் ஆன காலத்தில் பார்க்கவில்லை. திரை உலகிற்கு வந்த பிறகு இவைகளை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தேன். என் குருநாதர் கே.பி. யின் படங்கள் உட்பட! இந்த லிஸ்டில் நான் ஒரு நாள் இரவு வீட்டில் அனைவரும் உறங்கியபிறகு ராகவேந்திரர் படம் பார்த்தேன்.

பார்த்து பரவசம் அடைந்தேன் என்று சொன்னால் மிகையாகாது. படம் முடியும்போது அதிகாலை மூன்று மணி இருக்கும். நான் பூஜை அறைக்குச் சென்று சற்று தியானம் செய்வோம் என்று யோசித்தேன். அங்கு சென்று அமர்ந்துபார்த்தால் ராகவேந்திர சுவாமிகளின் படம் பூஜையில் இல்லை.

கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்த போது ஒரு ப்ளாஷ் வந்தது. நீ யாரைப்பார்த்து இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாயோ அவரிடமே சென்று படம்
வாங்கிக்கொள் என்று...இது சாத்தியமா.......என்று விட்டுவிட்டேன்.

ஒரு சில நாட்களில், ஜெய்ஸ்ரீ பிக்சர்ஸ் அதிபர் டாக்டர்.எஸ்.வி.ரமணனை சந்தித்து அவரிடம் இக்கதையை சொன்னேன். முடிந்ததைச்செய்கிறேன் என்றார். நாட்கள் சென்றன.
எஸ்.வி.ரமணன் ஒரு நாள் அவரது அலுவலகத்தில் நடக்க இருந்த பொங்கல் விருந்துக்கு அழைத்தார். ( பொங்கல் நாள் அன்று இல்லை..!அதற்கு அடுத்த நாள்) சென்றேன். சூப்பர் ஸ்டார் வந்திருந்தார். சற்று டென்ஷன் ஆக இருந்தார் - ஒரு படம் ரிலீஸ் ஆன நேரம். பலர் சென்று படம் சூப்பராக இருக்கு கவலை வேண்டாம் என்று சொன்னார்கள்....அவர் வந்ததே சுமார் 10 மணி அளவில்..இரவு உணவுக்கு பலர் சென்றார்கள். நாங்கள் சிலர் இன்னும் பேசிக்கொண்டு இருந்தோம்.

அப்பொழுது எஸ்.வி.ஆர்..என்னிடம் சாருக்கு அந்தக்கதையை சொல்லுங்கள் என்றார். இரவு 11.30க்கு சொன்னேன். சூப்பர் ஸ்டாரும் கேட்டார். நான் எனது ஆசையையும் சொன்னேன். எனக்கு நீங்கள் ஒரு படம் தாருங்கள் என்று! இவ்வளவு லேட் ஆக,, அதுவும் அவர் "டென்ஷனில்" இருந்தபோது ,நாம் சொன்னோமே என்று எனக்கு நம்பிக்கை இல்லை! சரியாக 2.. 3 நாள் கழித்து அதாவது பொங்கல் விடுமுறை முடிந்தபிறகு ஒரு போன் வந்தது... நாங்கள் ரஜினி சார் வீட்டில் இருந்து பேசுகிறோம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? என் பெயர் சத்யநாராயணா என்று..! டப்பிங்கில் இருப்பதாகவும் , வீட்டிற்கு மதியம் உணவு நேரத்தில் வந்து விடுவேன் என்றும் சொன்னேன்.

ஒரு ஆட்டோவில் வெள்ளை ஆடை அணிந்து ஒருவர் (திரு.ஜெயராம் என்று பிறகு தெரிந்தது) ஒரு பெரிய (2அடிக்கு 1 1/2 அடி) ராகவேந்திரர் படத்தை கொடுத்து சார் கொடுக்கச்சொன்னார்கள் என்றார்... பூரிப்படைந்தேன்..இன்றும் எங்கள் பூஜையில் அப்படம் இருக்கிறது..

ஒருவர்....அந்தஸ்து பார்க்காமல் இன்னொருவர் மனம் சந்தோஷம் அடையும்படி நடந்துகொள்வது அரிது..அதுவும் விண்ணப்பத்தை மறக்காமல் செய்வது அரிதோ அரிது..அப்படி ஒரு அபூர்வ ராகம்....சூப்பர் ஸ்டார்..!

Friday, July 11, 2008

Superstar .......




நான் இதுவரை தமிழில் எழுதியது இல்லை. முதல் பதிவே ஒரு நல்லவரை பற்றி இருக்கவேண்டும் , அதுவும் நம்மோடு இருப்பவராய் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்னொரு காரணமும் உண்டு. நடிகர் திலகத்தை பற்றி எழுதலாம் என்றால் அதை ஆங்கிலத்தில் ஏற்கனவே எழுதிவிட்டேன். இப்பொழுது பேசப்படும் படம்...வர இருக்கும் படம் குசேலன்.! அதில் ஒரு சிறிய வேடம் எனக்குக்கிடைத்தது. என் நண்பர் இயக்குநர் பி.வாசு மூலமாக. இப்படத்துக்காக நான் சுமார் இரண்டு வாரங்கள் ஹைதராபாத் பிலிம் சிட்டியில் படப்பிடிப்புக்காக சென்று இருந்தேன். அப்பொழுது தான் அந்த அதிசய நபருடன் பேசி பழக நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. என்னவென்று சொல்ல? இப்படி ஒரு நபரை நான் சந்தித்ததே இல்லை! இனியும் சந்திப்பேனா என்று சந்தேகமாக இருக்கிறது. அவரின் எளிமையை காண பல சந்தர்ப்பங்கள் , படப்பிடிப்புக்கு இயக்குநர், 11 மணிக்கு வந்தால் போதும் என்று சொன்னாலும், 9 மணிக்கே வந்து எங்கள் அனைவருடனும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்ததைச்சொல்லவா?

ரூமில் என்ன பண்ணப்போறேன். இங்கேயாவது நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள் என்று சமபந்தி போஜனம் அருந்தியதைச்சொல்லவா?

ஆன்மீகத்திலிருந்து, நான் நடத்தும் சினிமாவின் மூலம் நிர்வாகப்பயிற்சியைப்பற்றி பேசியதைச்சொல்லவா?
ஷுட்டிங் முடிந்து நாங்கள் எல்லோரும் பிலிம் சிட்டியைச்சுற்றி வாக்கிங் சென்றதை நினைத்து நெகிழவா?
உண்மையில் அவர் , இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால், காரணம் அவரின் நல்ல மனமும் குணமும்தான்! ஸ்டைல், நடிப்பு எல்லாம் அப்புறம்தான்...! அவருக்கு அமைதியோ அல்லது தனிமையோ தேவைப்படும்போது சற்றுத்தள்ளிச் சென்று உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கி பிறகு சபையில் கலந்து கொள்வார். ஒவ்வொருவரையும் அழகாக அளந்து அவர்களுக்குச்சேரவேண்டிய மரியாதைக்கு அதிகமாகவே அளிப்பார். சில சீன்களில்தான் இருந்தாலும், ரஜினி என்ற மிகப்பெரிய மனிதருடன் நடித்ததற்கு, முதலில் இயக்குநருக்கும், என்னை அறிமுகப்படுத்திய எனது குரு கே.பாலச்சந்தர் சாருக்கும் தான் நான் நன்றி சொல்ல வேண்டும். படையப்பாவில் மணிவண்ணனின் வக்கீலாக இரண்டு நாள் அவருடன் நடித்திருந்தாலும்....இது ஒரு அற்புதமான அனுபவமே..!

((இன்னும் வரும்)
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.